Saturday, August 23, 2014


        அசுரர்களை அழிக்க பைரவர் தோன்றல் 

ஒருசமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூ லியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை 

வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து 

ஒன்றாகி ஒன்றிலிருந்து எட்டாகி எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக 

அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ் வடைந்து 

தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்த தாகவும் 

புராணங்கள் கூறுகின்றன ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை 

 மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவ 

யோகினிகள் யார் யார் என்பதைக் காண்போம் அசிதாங்க பைரவர் பிராம்ஹி குரு பைரவர் மகேஸ்வரி 

சண்ட பைரவர் கவுமாரி குரோதான பைரவர் வைஷ்ணவி உன்மத்த பைரவர் வாராஹி 

கபால பைரவர் இந்திராணி பீஷண பைரவர் சம்ஹார பைரவர் சண்டிகா தேவி ஆகியோர் ஆவர் 





No comments:

Post a Comment